Skip to content
Home » காஷ்மீர்…..பயங்கரவாதிகள் தாக்குதல்…. 5 வீரர்கள் வீர மரணம்

காஷ்மீர்…..பயங்கரவாதிகள் தாக்குதல்…. 5 வீரர்கள் வீர மரணம்

ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டம் தேரா கி கலி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு நேற்று மாலை வீரர்கள் வேன் மற்றும் ஜீப்பில் சென்றனர்.தேரா கி கலி அருகே தாத்யார் மோர் என்ற பகுதியில் உள்ள வளைவான சாலையில் சென்றபோது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். மலைப்பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், ராணுவ வாகனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்தகோர தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். மேலும், 3 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!