Skip to content
Home » தஞ்சை அருகே 15 அடி உயர திருவள்ளுவர் சிலை திறப்பு….

தஞ்சை அருகே 15 அடி உயர திருவள்ளுவர் சிலை திறப்பு….

  • by Senthil

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வெள்ளாஞ்செட்டித் தெருவில் தமிழ்த்தாய்க் கோட்டத்தில் 15 அடி உயர திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடந்தது.

தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சிலையைப் புதுச்சேரி புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து திறந்து வைத்தார். பின்னர் தமிழ்த்தாய் அறக்கட்டளைத் தலைவர் உடையார்கோவில் குணா கூறியதாவது:

ஆறு அடி உயர பீடத்தில் 9 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 15 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான இச்சிலை முழுவதும் மிகப்பெரிய கருங்கல்லால் ஆனது. 3 ஆயிரம் கிலோ எடையுடையது. உலகின் இரண்டாவது மிகப் பெரிய கருங்கல்லில் செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலையாகப் போற்றப்படுகிறது.

திருக்குறள் முதல் அடியில் 4 சீர்களைக் குறிக்கும் வகையில் சிலையின் தலை முடி 4 முடிச்சுகளாகவும், இரண்டாவது அடியில் 3 சீர்களைக் குறிக்கும் விதமாக தாடி 3 அடுக்குகளாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி கிருஷ்ணா சிற்பக்கூடத்தில் தயார் செய்யப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விழாவில் மாரியம்மன் கோவில் ஊராட்சி முன்னாள் தலைவர் தனசேகர், தஞ்சாவூர் கூட்டுப் பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத் தலைவர் சு. கார்த்திகேயன், ஞா. கருணாகரன், முனைவர் தி. நெல்லையப்பன், வழக்குரைஞர் சீனி. சந்திரசேகர், ஆய்வாளர் இராம. சம்பந்தமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!