Skip to content
Home » தஞ்சை கலெக்டர் ஆபிஸ் அருகே மரத்தில் சடலமாக தொங்கிய முதியவர்….

தஞ்சை கலெக்டர் ஆபிஸ் அருகே மரத்தில் சடலமாக தொங்கிய முதியவர்….

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே சாலையோரம் உள்ள ஒரு மரத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக தொங்கினார். இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டனர்.

ஆனால் அவர் யார்.? எந்த ஊர்.? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து அந்த முதியவர் உடலை பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தூக்கு போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் யார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!