Skip to content
Home » தஞ்சை அருகே டூவீலர் மீது மோதி கவிழ்ந்த கார்….

தஞ்சை அருகே டூவீலர் மீது மோதி கவிழ்ந்த கார்….

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே பண்டாரவாடை விபி நகரை சேர்ந்தவர் ஹாஜாநஜ்முதீன் (52)‌. மெக்கானிக் ஷாப் வைத்துள்ளார். இவர் கடையில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக தனது காரை பண்டாரவாடை மேல தெரு வழியாக ஓட்டி வந்தார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் பண்டாரவாடை திருமஞ்சன வீதியை பகுதியைச் சேர்ந்த ஹாஜாமைதீன் (30) என்பவர் நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டி மீது மோதி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில்

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்த பாபநாசம் எஸ்ஐ கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!