Skip to content
Home » தஞ்சை அருகே வெவ்வேறு இடத்தில் சாலை விபத்து…. 2 பேர் பலி…

தஞ்சை அருகே வெவ்வேறு இடத்தில் சாலை விபத்து…. 2 பேர் பலி…

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு புதுார் பவர் ஹவுஸ் அருகே சாலையோரம் நடந்து சென்ற 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பட்டுக்கோட்டையில் இருந்து சென்னை சென்ற தனியார் பேருந்து அந்த மூதாட்டியின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல ஒரத்தநாடு அருகே சேதுராயன் குடிகாடு கிராமத்தை சேர்த்த ராமன் மகன் உத்திராபதி (50). விவசாயி. இவர் மேல உளூரில் இருந்து டீ குடிப்பதற்காக பருத்தியப்பர் கோயில் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பைக் மோதியதில் உத்திராபதி படுகாயமடைந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உத்திராபதி இறந்தார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!