Skip to content
Home » தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்த கார் …

தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்த கார் …

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை புதிய பேருந்து நிலையம் அருகே ஹவில்தார்சத்திரம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் பள்ளத்தில் விழுந்தது. அம்மாபேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை சார்பாக சாலை போடப்பட்டு முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது. இந்த சாலையானது ஹவில்தார்சத்திரத்தில் இருந்து உடையார் கோவில் சாலையை இணைக்கும் வழியாகும்.

இந்த சாலை முழுவதுமாக முடிக்கப்படாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த சாலையானது நீடாமங்கலம், கொரடாச்சேரி, திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம், தஞ்சாவூர். திருச்சி செல்லும் முக்கிய சாலையாகும். இதில் தினமும் ஆயிரக்கணக்கில் பேருந்துகள், லாரிகள், பைக்குகள், ஆட்டோ, சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் பகுதியாக உள்ளது.

இந்த பகுதியில் இரும்பு தடுப்பு வேலி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த இரும்பு தடுப்பு வேலி இல்லாததால் பள்ளம் இருப்பது தெரியாமல் வெளியூரிலிருந்து வருபவர்கள் நிலை தடுமாறுகின்றனர். இதேபோல் சில நாட்களுக்கு பின் முன்பு அந்த பகுதியில் பைக் விபத்து அடிக்கடி நடைபெற்றது.

பின்பு தேசிய நெடுஞ்சாலை மற்றும் அம்மாபேட்டை காவல் துறையினர் சார்ப்பில் அந்த பகுதியில் மண் நிரப்பப்பட்டு இரும்பு தடுப்பு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த இரும்பு தடுப்பு தற்போது அந்த பகுதியில் இல்லை. இதனால் அந்த வழியே வந்த கார் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும் அந்த சாலையில் இரும்பு தடுப்பு வேலி அமைத்து விபத்துகளை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!