Skip to content
Home » தஞ்சை அருகே மின்கம்பத்தில் லாரி மோதி 3 பேர் படுகாயம்…

தஞ்சை அருகே மின்கம்பத்தில் லாரி மோதி 3 பேர் படுகாயம்…

மதுரையில் இருந்து கும்பகோணத்திற்கு புதிதாக தயார் செய்யப்பட்ட டேங்கர் லாரி ஒன்று சென்றது. லாரியை திருவிடைமருதூரை சேர்ந்த விவேக் என்பவர் ஓட்டி வந்தார். அருகில் 2 கிளீனர்கள் பணியில் இருந்தனர்.

இந்நிலையில் லாரி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சாலியமங்கலம் இடையே வடக்கு நாயகன் பேட்டை மெயின்ரோட்டில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி மின்கம்பத்தில் மோதியது.

பின்னர் அங்கிருந்த பழைய இரும்பு கடையில் புகுந்து நின்றது. இந்த விபத்தில் லாரி டிரைவர் உள்பட 3 பேரும் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பாபநாசம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரையும் மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பாபநாசம் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்தினை நேரில் ஆய்வு செய்து சேதங்கள் குறித்து விசாரணை நடத்தி மின் இணைப்பை சீர் செய்தனர்.

இச்சம்பவம் குறித்து பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!