Skip to content
Home » சூர்யாவை முட்ட வந்த காளை….. சூட்டிங்கையே நிறுத்திய வெற்றிமாறன்…

சூர்யாவை முட்ட வந்த காளை….. சூட்டிங்கையே நிறுத்திய வெற்றிமாறன்…

  • by Senthil

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் வாடிவாசல். இந்த படம் சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற குறு நாவலை தழுவி உருவாகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த படம் எப்போது துவங்கும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

vadivasal

ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இதுவரை எந்த பணியும் நடைபெறவில்லை. இதற்கிடையே கடந்த ஆண்டு இப்படத்திற்கான ஒத்திகை படப்பிடிப்பு நடைபெற்றது. சென்னை அருகே செட் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகளுடன் சூர்யா மோதுவது போன்று படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படப்பிடிப்பின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது.

vadivasal

இந்நிலையில் இந்த படப்பிடிப்பு குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்றை இயக்குனர் தமிழ் வெளியிட்டுள்ளார். அதில் வாடிவாசல் படப்பிடிப்பின் போது ஒரு காளை என் கையின் மீது பாய்ந்தது. அதனால் பத்து அடி தூரம் நான் தூக்கி வீசப்பட்டேன். அதேபோன்று சூர்யாவை ஒரு காளை மோத வந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த வெற்றிமாறன் படப்பிடிப்பையே நிறுத்திவிட்டார் என்று கூறினார். சூர்யா குறித்து வெளியான இந்த தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!