Skip to content
Home » திட்டமிட்டபடி நாளை லேண்டர் நிலவில் இறங்கும்…. மாலை 5.20 முதல் நேரடி ஒளிபரப்பு

திட்டமிட்டபடி நாளை லேண்டர் நிலவில் இறங்கும்…. மாலை 5.20 முதல் நேரடி ஒளிபரப்பு

சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர், நாளை மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்பின் நேரத்தில் சற்று மாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையே சந்திரயான் தரையிறங்குவது 27-ந்தேக்கு தள்ளிப்போகலாம் என்ற செய்தி வெளியானது. இந்த நிலையில், நாளை திட்டமிட்டபடி லேண்டர் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. தற்போது லேண்டர் நிலவில் இருந்து 70 கி.மீட்டர் தொலைவில் உள்ளதாகவும் சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நாளை மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவில் லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கைகள் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் சந்திரயான் -3ன் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது எனவும் திட்டமிட்டப்படி நாளை மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்பகுதியில் லேண்டர் தரையிறக்கப்படும். சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறக்கப்படும் நிகழ்வை நாளை மாலை 5.20 மணி முதல் நேரலையில் பார்க்கலாம் என இஸ்ரோ டுவீட் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!