Skip to content
Home » வால்பாறையில் தீமிதி திருவிழா….ஏராளமான மக்கள் பங்கேற்பு…

வால்பாறையில் தீமிதி திருவிழா….ஏராளமான மக்கள் பங்கேற்பு…

கோவை மாவட்டம், வால்பாறையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தேயிலை தோட்ட பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் திருவிழாக்கள் களை கட்டி உள்ளது. பொங்கலை முன்னிட்டு பொங்கல் வைத்து படைத்தல் அலகு குத்துதல் தீ மிதித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பிரதானமாக கரகாட்ட நிகழ்ச்சிகள் அனைத்து தேயிலை தோட்ட பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு கட்டமாக வால்பாறையை அடுத்த தாய் முடி எம்டி தேயிலை தோட்டத்தில் தீமிதி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. கோவிலில் முன் பகுதியில் நீளமான குழி வெட்டப்பட்டு தீ உண்டாக்குவதற்கான மரங்கள் அடுக்கப்படுகின்றன தொடர்ந்து பூஜைக்கு பின் மரங்கள் விறகுகள் மீது சூடம் ஏற்றி வழிபாடு நடத்தி

தீ உண்டாக்குகின்றனர்.தீ ஓரளவு எரிந்த பின் நெருப்பு கனல்களாக மாறிய பின் தீ மிதிக்க வேண்டியவர்கள் கடவுளிடம் உத்தரவு பெற்று தீ மிதித்தனர். இதில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகளும் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.இந்நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!