Skip to content
Home » கரூர் கடையில் கைவரிசை….காமிரா முன் நின்று செல்பிஎடுத்த கொள்ளையன்

கரூர் கடையில் கைவரிசை….காமிரா முன் நின்று செல்பிஎடுத்த கொள்ளையன்

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி அடுத்த சாதாத் நகர் பகுதியில் அமைந்துள்ள ஜெராக்ஸ் கடை ஒன்றில் 19.2.2023 காலை 3 மணி அளவில் திருட்டு சம்பவம் நடைபெற்றது.

முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே இருந்த லேப்டாப், பணம் மற்றும் உதிரிபாகங்களை திருடிச் சென்றுள்ளான். காவல்துறை தரப்பில் திருட்டு போன பொருட்களின் மதிப்பு எவ்வளவு என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெராக்ஸ் கடையில் இருந்த பொருட்களை திருடி சென்ற கொள்ளையன் அங்கிருந்த சிசிடிவி கேமரா முன்பு நின்று செல்ஃபி எடுத்து சென்றுள்ளான்.

மேலும், முகமூடி அணிந்த நபர் இரண்டு சட்டைகளில் காணப்படுவதால் கொள்ளையன் ஒரு நபரா? இருவரா?என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.இந்த திருட்டு சம்பவத்தால் பள்ளப்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!