திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து ஆந்திர எல்லை பகுதியான கொத்தூர் வரை B7 என்ற எண் கொண்ட அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று நாட்றம்பள்ளியை அடுத்த பச்சூர் பகுதியில், பேருந்தில் பயணிகள் அமர்ந்திருக்கும்போதே ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் பேருந்தை ஓரம் கட்டி நிறுத்தியுள்ளனர். அதன்பின் ஓட்டுநர் வெங்கடேசன் பேருந்தில் இருந்து இறங்கிவிட, நடத்துநர் புஷ்பராஜ் பேருந்திலேயே படுத்து உறங்கியிருக்கிறார். இதனால் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் பேருந்திலேயே பயணிகள் காத்துக் கிடந்தனர்.