Skip to content
Home » கொலை மிரட்டல்…….புதுகை போலீசில் பாஜக பிரமுகர் புகார்

கொலை மிரட்டல்…….புதுகை போலீசில் பாஜக பிரமுகர் புகார்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய சிறுபான்மையினர் பிரிவு  செயலாளர் வேலூர் இப்ராஹிம். இவர் புதுக்கோட்டையில் வசித்து வருகிறார். இவருக்கு  இன்ஸ்டாகிராமில் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதாம்.  இது குறித்து வேலூர் இப்ராஹிம், இன்று புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.  இன்று காலை துப்பாக்கி  போலீஸ் பாதுகாப்புடன் போலீஸ் நிலையம் வந்த இப்ராஹிம்  இன்ஸ்பெக்டர்(பொ)  ஜாபர் அலியிடம் இது தொடர்பாக புகார் கொடுத்தார்.

இந்த புகார் சைபர் கிரைம் போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. சைபர் கிரைம் போலீசார், இந்த மிரட்டல் விடுத்த நபர் யார் என கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!