Skip to content
Home » திருக்குறள் மாநாடு….. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை….. கலெக்டர் வழங்கினார்

திருக்குறள் மாநாடு….. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை….. கலெக்டர் வழங்கினார்

  • by Senthil

திருக்குறள் மாணவர் மாநாடு  விருதுநகரில் 2 நாள் நடந்தது.  இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.  அரியலூர் மாவட்டத்தில் இருந்து , தமிழ் இலக்கியமன்ற தேர்வில்  வெற்றி பெற்ற  17 மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்று தி்ரும்பிய மாணவ, மாணவிகளுக்கு  பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா  மாணவ, மாணவிகளுக்கு  பங்கேற்பு சான்றுகளையும்,  அவர்களின் ஒரு வருட கல்வி உதவித்தொகையாக ரூ.18 ஆயிரமும்  வழங்கி வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, பள்ளித்துணை ஆய்வாளர் பழனிசாமி,ஆசிரியர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!