Skip to content
Home » திருநாவுக்கரசர் வருத்தத்தில் உள்ளார்…. திருச்சியில் காங். தலைவர் பேட்டி

திருநாவுக்கரசர் வருத்தத்தில் உள்ளார்…. திருச்சியில் காங். தலைவர் பேட்டி

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரைவைகோ மற்றும் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முரசொலி  ஆகியோரை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை  பிரசாரம் செய்தார். இதற்காக திருச்சி வந்த செல்வப்பெருந்தகை  விமான நிலையத்தில் நிரு’பர்களிடம் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

மாநகராட்சி, ஊராட்சி மன்றத் தேர்தலுக்கு எப்படி மாவட்ட தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்வார்களோ அதுபோல் பிரதமர்  டில்லிக்கும்  தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து வருகிறார். எப்படியாவது தமிழக மண்ணில் கால் பதிக்க முடியுமா என்று பேராசை இருக்கிறது.
தமிழக மக்கள் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தையும், பிரித்தாளும் கொள்கையை கையாளக்கூடிய பாஜகவையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த மண் சமூக விடுதலைக்கான மண். இது  சமூக நீதிக்கான மண்.
ஆகவே, ஆர் எஸ் எஸ்சின் சித்தாந்தம் பாஜகவின் பிரித்தாளும் கொள்கை இந்தியர்களிடையே பிரிவினை ஏற்படுத்துதல் உள்நாட்டு மக்களை வெளிநாட்டில் விற்பது வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுதல் போன்ற நாட்டிற்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். ஒருபோதும் இந்த தேர்தலில் இந்திய மக்கள் இப்படிப்பட்ட பாசிச சக்திகளை அனுமதிக்க மாட்டார்கள்.

வாஜ்பையை பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய தந்தையாகவும், குருவாகவும் தேசத்தின் கட்சியின் தலைவராக ஏற்றுக் கொண்டவர். மோடி ஏற்றுக் கொண்ட தலைவரான வாஜ்பாய் கூறுகையில் உலகத்தின் இரும்பு பெண்மணி  என்று போற்றப்பட்ட இந்திரா காந்தியை துர்கா தேவி என்று கூறினார். துர்காதேவிக்கு என்ன சக்தி இருக்கிறதோ ஆளுமை இருக்கிறதோ அந்த சக்தியும் ஆளுமையும் இந்திரா காந்திக்கு இருப்பதாக கூறினார் அப்படி என்றால் தலைவர் வாஜ்பாய் சொன்னது தவறா அல்லது இவர் சொன்னது  தவறா?

இந்த தேசத்தின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு அடியும் பார்த்து செயல்பட்டவர் இந்திரா காந்தி.
கச்ச தீவு குறித்து பேசுபவர்கள் வெஜ் பேங்கை குறித்து ஏன் பேசவில்லை? ஏன் மூடி மறைக்க வேண்டும்.

வெஜ் பேங்க் என்பது என்ன அதை எதற்காக இந்திரா காந்தி இந்திய கடல் எல்லையில் கொண்டு சேர்த்தார் வெஜ்பேங்க் என்ற பகுதியில் என்ன என்ன அபூர்வங்கள் கனிம வளங்கள் உள்ளது உலகத்தில் அது போல் உள்ளதா என்பது குறித்து பேசவில்லை.
மோடியிடம் எத்தனையோ விஞ்ஞானிகள், அகழ் ஆராய்ச்சியாளர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் அவர் கேட்டு மக்களிடம் சொல்லட்டும். ஒன்றுமில்லாத கச்சத்தீவை குறித்து மற்றும் பேசி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது இந்தியாவினுடைய எல்லையை விரிவு படுத்தவும் வெஜ் பேங்க் மூலம் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தவும் செய்திருக்கிறார்கள்.
7லட்சம் புலம்பெயர்ந்த தமிழர்கள், தொப்புள் கொடி தமிழ் உறவுகள் அங்கு வாழ்ந்த கொண்டு இருக்கின்றனர்.
அவர்களுடைய வாழ்வில் மிகப்பெரிய பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்ற ரீதியில் இந்த பேச்சு அமைந்துள்ளது.
எனவே கச்சத்தீவு பற்றி பேசுபவர்கள் கட்டாயம் வெஜ் பேங்க் குறித்தும் பேச வேண்டும்.

தற்போது எம்பி யாக இருக்கக்கூடிய திருநாவுக்கரசருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. விரைவில் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பிரபாகர்,  மோடி மீண்டும் ஜெயித்தால் சர்வாதிகாரியாக இருப்பார் என கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு

ஜெயிச்சார்னா என்ன ? கடந்த பத்தாண்டு காலமாகவே சர்வாதிகாரி போல தானே  மோடி செயல்படுகிறார். அவர் சர்வாதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக தான் சிஏஏ திருத்தச் சட்டம் லடாக் பகுதியில் 20ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை சீனாவிற்கு தாரை வார்த்து கொடுத்ததுள்ளார்.
இல்லை என்றால் சொல்ல சொல்லுங்கள்.

மோடி சர்வாதிகாரி என நிர்மலா சித்தராமனின் கணவர் பிரபாகரன் மட்டும் கூறவில்லை, மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியசுவாமியும் குறிப்பிட்டுள்ளார். இந்திய பிரதமராக இருப்பதற்கு தகுதி இல்லை இவர் சீனாவின் தூதுவராக
நியமிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் தான் முதன் முதலாக அணுகுண்டு சோதனை நடத்தினோம். இந்திரா காந்தி தன்னுடைய உயிரைக் கொடுத்து நாட்டின் கட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளார்.மோடியோ, பாஜகவோ இந்தியாவை குறித்து பேசுவதற்கு எந்த வித தகுதியும் இல்லை.

அண்ணாமலை என்பவர் தமிழர்களையும் தமிழ்நாட்டையும் காட்டிக் கொடுப்பவர். தமிழ்நாட்டு மக்களை காட்டிக் கொடுக்கலாமா துரோகி ஆகலாமா?

2015 முன்னாள் வெளி விவகாரத்துறை செயலாளராக இருந்த ஜெய்சங்கர் கச்சத்தீவை மீட்க முடியாது அது கொடுத்தாச்சு அதில் பல ஒப்பந்தங்கள் உள்ளது என்று பேசியவர் அரசியலுக்காக இன்று பேசுகிறார். அரசியலுக்காக பேசுகிறவர்கள் நாட்டிற்காகவும் பேச வேண்டும்.

கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற்று இந்தியா கூட்டணி வெல்லும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது திருச்சி காங்கிரஸ் கட்சியின் மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ், மேற்கு மாவட்ட தலைவர் கலை, நிர்வாகிகள், சரவணன், மகேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!