கர்நாடகாவில் சமீபத்திய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று நீண்ட இழுபறிக்கு பின்னர் ஆட்சியமைத்தது. முதல்-மந்திரியாக சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமார் ஆகியோர் கவர்னர் தாவர்சந்த் கெலாட் முன்னிலையில் முறைப்படி பதவியேற்று கொண்டனர். கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார், பா.ஜ.க. தலைவர்களை இன்று சந்தித்து பேசினார்.
இதன்படி, கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்து டி.கே. சிவக்குமார் பேசினார். அதற்கு முன்பு, பா.ஜ.க.வின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய மந்திரியான, தனது உறவினர் எஸ்.எம். கிருஷ்ணாவை பெங்களூரு நகரில் வைத்து டி.கே. சிவக்குமார் சந்தித்து பேசினார். டி.கே. சிவக்குமார் தனது மகளை, எஸ்.எம். கிருஷ்ணாவின் பேரனுக்கு கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் செய்து வைத்து உள்ளார்.