Skip to content
Home » கவர்னர் ரவி மீது…. உச்சநீதிமன்றத்தில்…..தமிழக அரசு வழக்கு

கவர்னர் ரவி மீது…. உச்சநீதிமன்றத்தில்…..தமிழக அரசு வழக்கு

  • by Senthil

தமிழக கவர்னராக ஆர். என். ரவி பதவியேற்று 2 வருடங்கள் ஆகிறது.  அவர் வந்த நாள் முதல் தமிழக அரசை  முடக்கும் வகையில்  அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதாக , தமிழக அரசு ரவி மீது  புகார்கள் கூறி வந்தது. இது தொடர்பாக  ஜனாதிபதிக்கும் புகார் செய்யப்பட்டது. ஆனாலும் ரவி தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு தடையாக இருப்பதாகவும்,  அரசு கருதுகிறது.

இது தொடர்பாக  தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் கவர்னர் ரவி மீது வழக்கு தொடர்ந்து உள்ளது. அதில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு  கவர்னர்  முட்டுக்கட்டை போடுகிறார். இதனால் அரசின் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகிறது. மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் தர கால அளவு நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி  உச்சநீதிமன்றத்தில்  அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது.

இந்த வழக்கு எப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரியவில்லை. இந்த வழக்கின் தீர்ப்பை  இந்தியா முழுவதும் உள்ள அனைத்து எதிர்க்கட்சி அரசுகளும்  ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு விடிவு காலம் கிடைக்கலாம் என எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!