வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை உயர்வுடன் துவங்கியுள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் உயர்ந்து ரூ.6,250 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 49 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வாரத்தின் முதல் நாளிலேயே ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 வரை உயர்ந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தங்கம் அடுத்தடுத்த நாட்களில் விலை உயர்ந்து சவரனுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கடக்கும் என்கிற கவலை பொதுமக்களிடையே நிலவி வருகிறது.
வெள்ளியின் விலையும் இன்று சற்று உயர்வைச் சந்தித்துள்ளது. 80 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிராம் வெள்ளி, இன்று 30 பைசா அதிகரித்து, 80 ரூபாய் 80 பைசாக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது ஒரு கிலோ பார் வெள்ளி 80,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.