Skip to content
Home » தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு…

  • by Senthil

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது.  ஒரு சவரனுக்கு சுமார் 200 ரூபாய் அதிகரித்து இருந்ததே நகை வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நகை வாங்குவோருக்கு மற்றும் ஒரு அதிர்ச்சியாக இன்றைய தங்கத்தின் விலை உயர்வு உள்ளது. தங்கத்தின் விலை இன்று வர்த்தக நேரம் துவங்கியதில் இருந்தே ஏறுமுகத்தில் இருந்து வந்தது.

இந்த நிலையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 100 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 940க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் நேற்று 46 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 800 ரூபாய் உயர்ந்து 47 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் வெள்ளியின் விலையும் நேற்று 50 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 76 ரூபாய் 20 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 80 பைசாக்கள் உயர்ந்து 77 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார்வெள்ளி 77 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்துள்ளது தங்கம் வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!