Skip to content
Home » தொப்பூர் அடுத்தடுத்து லாரி, கார்கள் விபத்து…4பேர் பலி…… முதல்வர் இரங்கல்

தொப்பூர் அடுத்தடுத்து லாரி, கார்கள் விபத்து…4பேர் பலி…… முதல்வர் இரங்கல்

தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகில் நேற்று மாலை5.15 மணியளவில் 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு லாரி பாலத்தை உடைத்துக்கொண்டு  விழுந்தது. இன்னொரு லாரி தீப்பிடித்தது.

இந்த விபத்தில் கோயம்புத்தூர், டவுன்ஹால், அசோக் நகரைக் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சு, விமல், அனுஷ்கா, ஜெனிபர் ஆகிய 4 நபர்கள் உயிரிழந்தனர் , 8பேர்  காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்க தலா  ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும்  நிவாரணமாக வழங்கப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்துடன் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு முதல்வர் ஆறுதல்  கூறி உள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!