ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பலபு சுதாகர் (36), அவரது இரு சகோதரிகள் மற்றும் 15 வயது சிறுமி உள்ளிட்ட 5 பேர், கடுமையான நிதி நெருக்கடி மற்றும் உடல்நலக்குறைவால் விரக்தியடைந்ததாக கூறப்படுகிறது. ஸ்ரீசைலம் நகரில் உள்ள ஓட்டல் அறையில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். நீண்ட நேரமாக அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அருகில் இருந்தவர்கள், ஜன்னல் வழியாக பார்த்தபோது 5 பேரும் உயிரிழந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
