Skip to content
Home » வௌ்ளத்தில் சிக்கி போலீஸ் ஏட்டு பலி…..

வௌ்ளத்தில் சிக்கி போலீஸ் ஏட்டு பலி…..

  • by Senthil

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர் மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்க தொடங்கின. பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும்  பாதிக்கப்பட்டது. பல்வேறு சாலைகள் போக்குவரத்து செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. பல்வேறு பகுதிகளிலும் மின்மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் மின் விநியோகமும் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தலைமை காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழ்ப்பாக்கம் மண்டபம் சாலை பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தலைமைக் காவலர் உயிரிழந்துள்ளார்.  மீட்புப் பணி முடிந்து திரும்பிச்சென்ற கொளத்தூர் K7 தலைமை காவலர் ருக்மேநாதன் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!