Skip to content
Home » திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா…… திருவெறும்பூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு….

திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா…… திருவெறும்பூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு….

  • by Senthil

 

திருச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளராக கருப்பையா நிறுத்தப்பட்டுள்ளார். தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும்

அவர், இன்றுதிருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்.பி.குமார் தலைமையில், பனையக்குறிச்சி, வேங்கூர், அரசங்குடி, துவாக்குடி, காட்டூர் உள்ளிட்ட 45  கிராமங்களில்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அவருக்கு, மேள தாளங்கள் முழங்க பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். இரட்டை இலைக்கே வாக்களிப்போம் என்று பெண்கள் கூறினர்.

இந்த வாக்கு சேகரிப்பில் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அமைப்பு செயலாளர்கள் S.வளர்மதி, T.ரத்தினவேல், R.மனோகரன், திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், அணிச் செயலாளர்கள் கார்த்திகேயன், முத்துக்குமார், ஒன்றிய கழக செயலாளர்கள் எஸ்.கே.டி கார்த்திக், எஸ்.எஸ்.ராவணன், மாவட்ட கழக துணை செயலாளர் சுபத்ரா தேவி, துவாகுடி நகர செயலாளர் எஸ்.பி.பாண்டியன், பேரூர் கழக செயலாளர் P.முத்துக்குமார், அரசு வழக்கறிஞர்கள் சின்னதுரை, சம்பத்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் S.P.கணேசன், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளர் S.பாஸ்கர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராஜமணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் சாந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!