திருச்சி – புதுக்கோட்டை சாலையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில், புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் எம்பி குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருச்சி கரூர் பெரம்பலூர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல்
பிரச்சாரப் பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்வது, அதிமுக சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில், மாவட்ட அவைத் தலைவர் அருணகிரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எம் பாலன், சந்திரசேகர், சின்னசாமி, ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளாக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.