Skip to content
Home » திருச்சியில் ஆட்டோ டிரைவர்களிடம் கத்தி முனையில் பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது..

திருச்சியில் ஆட்டோ டிரைவர்களிடம் கத்தி முனையில் பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது..

திருச்சி, ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் ( 32) ஆட்டோ டிரைவர். இவர் தனது ஆட்டோவை பழுது பார்ப்பதற்காக ஒர்க் ஷாப்பில் நிறுத்தியுள்ளார். பின்னர் சிங்கபெருமாள் கோவில் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் நின்று கொண்டிருந்த அங்கு வந்த மூன்று வாலிபர்கள் செல்வராஜிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் செல்வராஜ் புகார் அளித்தார். புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து,ஹரிஹரன், மற்றொரு ஹரிஹரன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். ராஜ்குமார் என்பவரை தேடி வருகின்றனர்.

இதேபோல் செசன்ஸ்கோர்ட் போலீஸ் நிலைய போலீஸ்சரகம் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் பின்புறம் நடந்து சென்ற ஆட்டோ டிரைவரிடம்வழிப்பறி செய்ததாக சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த 18 வயது சிறுவனை கைது செய்தனர் .அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!