Skip to content
Home » திருச்சி அருகே ஊராட்சி செயலாளரை தாக்கிய சகோதரர்கள் 2 பேர் கைது….

திருச்சி அருகே ஊராட்சி செயலாளரை தாக்கிய சகோதரர்கள் 2 பேர் கைது….

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது கண்ணனூர் ஊராட்சி இந்த ஊராட்சியின் செயலாளராக முத்துசெல்வன் (45) கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ஊராட்சி செயலாளர் முத்துச்செல்வன் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக கணக்கெடுக்கும் பணியை முடித்துவிட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது கண்ணனூர் சமத்துவபுரம் வடக்குவெளி பகுதி சேர்ந்த மலையப்பன் (30), அவரது தம்பி மாமுண்டி (28) மற்றும் சிறுவர்கள் மூன்று பேர் சேர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணியில் இருந்த முத்துச்செல்வனிடம் வீட்டு வரி கேட்டு திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் மலையப்பன், மாமுண்டி மற்றும் சிறுவர்கள் சேர்ந்து ஊராட்சி செயலாளரை பணி செய்ய விடாமல் தடுத்து, உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் சென்று விட்டனர்.

இதில் ஊராட்சி செயலாளருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் முத்துச்செல்வனை துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சம்பவம் குறித்து முசிறி தாலுகா ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்கு பதிந்து மலையப்பன், மாமுண்டி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!