Skip to content
Home » திருச்சி காவேரி ஆற்றில் திடீர் தீ…. பரபரப்பு..

திருச்சி காவேரி ஆற்றில் திடீர் தீ…. பரபரப்பு..

  • by Senthil

திருச்சி மற்றும் ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவிரிப்பாலத்தின் கீழ் காவிரியில் வளர்ந்துள்ள நாணல் செடிகள் புதர் மண்டி இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று அதில் ஏற்பட்ட தீ திடீர் என கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. இந்த தீ விபத்தால் காவிரி பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் முகத்தில் நாணல் பில்லின் எரிந்த கருந் துகள்கள் விழுந்ததால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில் சம்பவ

இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க வாகனம் காவேரி ஆற்றின் நடுவில் செல்ல வாய்ப்பு இல்லாததால் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!