Skip to content
Home » திருச்சியில் கிறிஸ்தவ ஆலயத்தின் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை…..

திருச்சியில் கிறிஸ்தவ ஆலயத்தின் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை…..

  • by Senthil

திருச்சி பொன்மலை நார்த் -டி ரயில்வே சுரங்கப்பாதை அருகே புனித ஆரோக்கியநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயமானது பொன்மலை சூசையப்பர் ஆலயத்தின் கிளை பங்கு ஆலயமாகும். இந்த ஆலயத்தில் வாரம் தோறும் திருப்பலி நடைபெறுவது வழக்கம் மற்ற நேரங்களில் இந்த ஆலயம் பூட்டி இருக்கும் இந்த ஆலயம் பொன்மலை ரயில்வே குடியிருப்பு பகுதியில் அமைந்திருப்பதால் முன்பெல்லாம் எப்பொழுதும் அந்த பகுதி பரபரப்பாக

காணப்படும் தினமும் பொதுமக்கள் ஆலயத்திற்கு வந்து செல்வது வழக்கம் இந்த நிலையில் அந்தப் பகுதியில் தற்போது எந்த குடியிருப்புகளும் இல்லை அந்தப் பகுதி காடுகள் போல் உள்ளது அதனால் அதனை பயன்படுத்தி நேற்று மர்ம நபர்கள் ஆலயத்தின் வெளிப்புற ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து அதில் இருந்த ஆம்ப்ளிஃபையர் ஆலயத்தில் இருந்த மைக் செட், சாப்பிடும் தட்டுகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த தகவலை அறிந்த பொன்மலை சூசையப்பர் ஆலயத்தின் பங்குத்தந்தை ஜெயக்குமார் பொன்மலை போலீஸ் நிலையத்திற்கு இன்று தகவல் அளித்தார். தகவலின் பெயரில் வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்ததோடு கைரேகை நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்தனர். மேலும் இது சம்பந்தமாக பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து ஆலயத்தில் பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!