Skip to content
Home » திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்டில் அடிதடி.. திருநங்கைகள் 11 பேர் மீது வழக்கு..

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்டில் அடிதடி.. திருநங்கைகள் 11 பேர் மீது வழக்கு..

 

திருச்சி வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் ( 53). இவர் தற்போது கல்கண்டார் கோட்டை பகுதியில் வீடு கட்டி அங்கு சென்று விட்டார். இவர் திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டத்தில் பம்ப் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்தார். திருமணம் ஆகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திருச்சி செந்தண்ணீர் புரம் மேம்பாலம் அருகே மொபட்டில் சிவக்குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவக்குமார் படுகாயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு தெற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

திருச்சி தென்னூர் காயிதே மில்லத் நகரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (  42). இவருக்கு திருமணம் ஆகி 18 ஆண்டுகள் ஆகிறது. இவர் பீமநகர் பகுதியில் டிபன் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் கடைக்கு சென்ற அவர் கடையில் மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி பாத்திமா கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி அரியமங்கலம் உக்கடை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் கீர்த்தனா (  20). இவர் நண்பர்களுடன் திருச்சி மத்திய பஸ் நிலையம் மதுரை பஸ்கள் நிற்கும் இடத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த திருநங்கைகளுக்கும் இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்பாக கீர்த்தனா கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்டோன்மென்ட் போலீசார் 11 திருநங்கைகள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!