Skip to content
Home » ரவுடிகளை சுட்டது ஏன்?.. திருச்சி போலீஸ் கமிஷனர் விளக்கம்..

ரவுடிகளை சுட்டது ஏன்?.. திருச்சி போலீஸ் கமிஷனர் விளக்கம்..

  • by Senthil

திருச்சியைச் சேர்ந்த ரவுடிகள் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த துரை மற்றும் சோமு சகோதரர்கள். திருச்சி உறையூர் குற்றப்பிரிவு போலீசார் இன்று மதியம் விசாரணைக்காக இருவரையும்  அழைத்து சென்ற போது அவர்கள் போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்றதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. ரவுடிகள் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் பிடிக்கப்பட்டனர் . இந்நிலையில் சம்பவ இடத்தை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது.. சுடப்பட்ட குற்றவாளிகள் இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர்கள் இருவரும் தேடப்படும் குற்றவாளிகளாக இருந்தனர். இந்நிலையில் திருச்சியில் நடந்த ஒரு கொள்ளை சம்பவம் தொடர்பாக அவர்கள் இருவரும் இன்று விசாரணைக்காக அழைத்து வரப்பட்டனர். அப்போது அவர்கள் போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்றனர். எனவே துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  விசாரணைக்காக கைது செய்து குற்றவாளிகளை போலீசார் அழைத்துச் செல்லும் பொழுது போலீசாரை தாக்கும் குற்றவாளிகளுக்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கை.  போலீசார் தங்களது உயிரை தற்காத்துக்கொள்ள அவர்களை சுட வேண்டிய சூழல் ஏற்பட்டது என கமிஷனர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!