Skip to content
Home » திருச்சி மாநகராட்சியில் 22 பணியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணை

திருச்சி மாநகராட்சியில் 22 பணியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணை

  • by Senthil

திருச்சி மாநகராட்சியில் இன்று, அரசாணை எண். 516, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள். 02.06.2023ன் படி மாநகராட்சி பணியாளர்களில் உதவி வருவாய் அலுவலர் பணியிடத்தில் பணிபுரிந்து வருபவர்களில் ஒருவருக்கு வருவாய் அலுவலர் ஆக பதவி உயர்வு செய்தும், உதவியாளர் பணியிடத்தில் பணிபுரிந்து வருபவர்களில் 11 பணியாளர்களுக்கு கண்காணிப்பாளர் ஆக பதவி உயர்வு செய்தும், இளநிலை உதவியாளர் பணியிடத்தில பணிபுரிந்து வரும் 10 பணியாளர்களுக்கு உதவியாளர் ஆக பதவி உயர்வு

செய்யப்பட்டு அதற்கான ஆணைகளை மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். இந்நிகழ்வில் மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன் ,துணை மேயர் திவ்யா, நகரப் பொறியாளர் சிவபாதம், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!