Skip to content
Home » மத்திய பஸ் நிலைய பகுதியில் சாலைகள் சீரமைப்பு….. திருச்சி மாநகராட்சி முடிவு…

மத்திய பஸ் நிலைய பகுதியில் சாலைகள் சீரமைப்பு….. திருச்சி மாநகராட்சி முடிவு…

  • by Senthil

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சேதமடைந்த உள் சாலைகளை சீரமைக்க திருச்சி மாநகராட்சி சார்பில் tender விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால், பஸ் ஸ்டாண்டில் உள்ள ரோடுகளின் மோசமான நிலை, பயணிகளுக்கும், பஸ் ஊழியர்களுக்கும் பெரும் சிரமமாக உள்ளது. மழையினால் சாலையின்  அரிக்கப்பட்டு, பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து, பொது நிதியில் சாலைகளை சீரமைக்க, 1.02 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு டெண்டர்  விடப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, patchwork செய்வதற்கு பதிலாக, bus stand’டைச் சுற்றியுள்ள arterial சாலைகளுடன் bus bay’களை இணைக்கும் அனைத்து சாலைகளும் மறுசீரமைப்பு செய்யப்படும். ஒரு மாதத்திற்குள் பணிகள் துவங்கி, சில வாரங்களில் நிறைவடையும் என, மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சாலையின் மோசமான நிலையைக் கருத்தில் கொண்டு, பஸ் ஸ்டாண்டிற்குள் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள, நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. ஆனால், பருவமழை துவங்கியதால், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இது குறித்து  சமூக செயற்பாட்டாளர் ஜமாலுதீன் கூறியதாவது: நகராட்சி நிர்வாகம் ஆண்டுதோறும் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டாலும், ஒரே ஒரு மழை பெய்தாலே போதுமானது. அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து தரமான பணிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். 24 மணி நேரமும் செயல்படும் பஸ் ஸ்டாண்டில், சாலைகள் அதிகளவில் சேதமடைவதை தவிர்க்க, அதிகாரிகள் சீரான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, பஸ் ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!