Skip to content
Home » திருச்சியில் ”தீப்பெட்டி” சின்னத்திற்கு அமைச்சர் மகேஷ் வாக்குகள் சேகரிப்பு….

திருச்சியில் ”தீப்பெட்டி” சின்னத்திற்கு அமைச்சர் மகேஷ் வாக்குகள் சேகரிப்பு….

  • by Senthil

திருச்சி பொன்மலையில் ரயில்வே பணிமனை ஊழியர்களிடம் அமைச்சர் மகேஷ் தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணியின் மறுமலர்ச்சி திமுகவின் வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம் பொன்மலை பகுதியில் ரயில்வே பணிமனை பொன்மலை கொட்டப்பட்டு ஆகிய பகுதிகளில் அமைச்சர் மகேஷ் துரை வைகோவிற்கு தீப்பெட்டி சின்னத்தில்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்‌. பொன்மலை

மத்திய தொழிற்சாலையின் முகப்பில் உள்ள ஆர்மெரிகேட் அருகில், பொன்மலை பணியாளர்களிடம் துண்டறிக்கை வழங்கி தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு கேட்டு ஆதரவு திரட்டினார். அதனைத் தொடர்ந்து, தந்தைப் பெரியார், அண்ணல் அம்பேத்கர், அண்ணல் காந்தியார் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்துவிட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

தொழிலாளர்களின் எழுச்சியும், வரவேற்பும் இன்றைய காலைப் பொழுதில் வெற்றிக்கு  சாத்தியமாக அமைந்தது.

பிரச்சாரத்தின் போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்களை எடுத்துக் கூறி மோடி அரசின் மக்கள் விரோத போக்கை எடுத்துக் கூறியும் வாக்குகளை சேகரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!