Skip to content
Home » திருச்சி மாவட்ட போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பு பேரணி

திருச்சி மாவட்ட போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பு பேரணி

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் இணைந்து ஊர்காவல் படையினரின் வாத்தியகுழு இசையுடன் கொடி அணிவகுப்பு பேரணியை இன்று மாலை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.வருண் குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல்-2024 ஐ முன்னிட்டு வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் பொருட்டு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் இணைந்து ஊர்காவல் படையினரின் வாத்தியகுழு இசையுடன் கொடி அணிவகுப்பு பேரணி இன்று மாலை சமயபுரத்தில் நடைப்பெற்றது.

இதில், திருச்சி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம், திருவெறும்பூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், அறிவழகன்,லால்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரமோகன் ஆகியோர்கள் கலந்து கொண்டு  கொடி அணிவகுப்பில் 52 மத்திய பாதுகாப்பு படையினர், 75 திருச்சி மாவட்ட ஆயுதப்படையினர், 8 திருச்சி மாவட்ட சட்டம் ஒழுங்கு பிரிவில் காவல் ஆய்வாளர்கள் உட்பட 60 காவல்துறையினர்  கலந்து கொண்டனர்.

இந்த கொடி அணிவகுப்பானது சமயபுரத்தில் உள்ள தனியார் மண்டபம் அருகே தொடங்கி

சமயபுரம் மாரியம்மன் கோவில் வளைவு, சமயபுரம் கடைவீதி, நரசிம்ம

மங்கலம் தெரு வழியாக வந்து சமயபுரம் காவல் நிலையம் முன்பு நிறைவடைந்தது.

மேலும் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் தொடர்பாக புகார் ஏதேனும் தெரிவிக்க வேண்டி இருப்பின் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உதவி எண். 94874 64651 என்ற எண்ணிற்கு தொடர்பு

கொள்ளுமாறு காவல்துறை சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!