Skip to content
Home » திருச்சி திமுக நிர்வாகி உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை… கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு

திருச்சி திமுக நிர்வாகி உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை… கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம்  அடுத்த மாடக்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சேகர் கடந்த 2015ம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் இவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த கொலை தொபடர்பாக  போலீசார் 13 பேரை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இவ் வழக்கில் தொடர்புடைய 13 நபர்களில் ஆச்சி குமார் (எ) குமார், ராஜா ஆகிய இருவர் இறந்துவிட்டனர்.  திருச்சி மத்திய மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜான்சன் குமார், இளையராஜா, நாட்டாமை என்கிற நடராஜன், கனகராஜ், ஹரிகிருஷ்ணன், செந்தில் ஆகிய 6பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருச்சி மாவட்ட இரண்டாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

முதல் குற்றவாளியான ஆச்சிகுமாரின் அண்ணன் மகன்  கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக இக்கொலை நடந்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

சரவணகுமார்(எ) கோழி சரவணன், மனோகர், சுரேஷ், ராஜி (எ) செல்வம், பால் எமர்சன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தவழக்கில் தொடர்புடைய இளையராஜா பல்வேறு கொலை, நில அபகரிப்பு என பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. அதேபோன்று ஜான்சன் குமார் திருச்சி திமுக மத்திய மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளராக உள்ளார் .இவ்வழக்கில்  அரசு வழக்கறிஞராக பாலசுப்பிரமணியன் ஆஜரானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!