Skip to content
Home » திருச்சி……. 2 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி……. 2 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கீழ கல்கண்டார் கோட்டை வசந்தம் நகரை சேர்ந்தவர் சங்கர் .இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சரண்யா (35) இவர் புதுக்கோட்டையில்  உள்ள அரசு  மருத்துவ கல்லூரியில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து  வந்தார்.

இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் 9 மாதத்தில் பெண் குழந்தையும் உள்ளது. இதனால் சரண்யா விடுமுறையில் வீட்டில் இருந்தார்.

இந்த நிலையில் சங்கர் வழக்கம் போல்  நேற்று  காலை தனது மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்றார். பின்னர்  வேலை விஷயமாக வெளியில் சென்று விட்டார்.

மதியம் சங்கர் , மனைவி சரண்யாவிற்கு போன் செய்துள்ளார். ஆனால் சரண்யா போனை எடுக்கவில்லை . இதனை தொடர்ந்து சங்கர்  மேல மேலகல்கண்டார் கோட்டையில் உள்ள சங்கரின் தந்தைக்கு தகவல் கொடுத்ததோடு போய் பார்க்குமாறு கூறி உள்ளார்.

அதன் அடிப்படையில் சங்கரின் தந்தை  மதியம் 1 மணியளவில் சங்கரின் வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது வீட்டின் கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது.  ஜன்னல் வழியாக பார்த்த பொழுது படுக்கையறையில் சரண்யா துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாக சங்கரின் தந்தை சங்கருக்கு தகவல் கொடுத்து உள்ளார்.

அதன் அடிப்படையில் சங்கர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததோடு உடனடியாக  திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். திருவெறும்பூர் போலீசார் சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!