Skip to content
Home » வெந்நீர் கொட்டி 1வயது குழந்தை பலி…. திருச்சியில் பரிதாபம்…

வெந்நீர் கொட்டி 1வயது குழந்தை பலி…. திருச்சியில் பரிதாபம்…

  • by Senthil
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே என்.பெருமாம்பட்டியை சேர்ந்தவர் இளையராஜா (33). இவருக்கு முகின்ராவ் (1) என்ற ஆண் குழந்தை உள்ளது. இளையராஜாவின் மனைவி தனது குழந்தையுடன் மட்டக்குறிச்சியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 28ம் தேதி இளையராஜாவின் மனைவி சமைத்துக்கொண்டிருந்தார்.  அப்போது கிச்சனுக்கு சென்ற 1வயது குழந்தை முகேன்ராவ் சுடுதண்ணீரை  தட்டி விட்டதாக கூறப்படுகிறது. இதில் கொட்டிய வெந்நீர் குழந்தையின் நெஞ்சு மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயமடைந்தது. அலறிதுடித்த குழந்தையை உடனடியாக உறவினர்கள் மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை முகேன்ராவ் பரிதாபமாக உயிரிழந்தார்.  குழந்தையின் உடலை கண்டு உறவினர்கள் கதறி அழுதது காண்போரையும் கண்கலங்க வைத்தது. இச்சம்பவம் குறித்து வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வெந்நீர் கொட்டியதில் காயமடைந்த குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!