Skip to content
Home » கணவர் இறந்த செய்தி கேட்டு மனைவி உயிரிழப்பு.. திருச்சியில் பரிதாபம்…

கணவர் இறந்த செய்தி கேட்டு மனைவி உயிரிழப்பு.. திருச்சியில் பரிதாபம்…

திருச்சி, மண்ணச்சநல்லூா் மேல காவல்காரத்தெருவில் வசித்து வந்தவர் பாஸ்கா்  ( 60). வீட்டுமனை வணிகத் தொழில் செய்து வந்தாா். இவரது மனைவி முத்துலெட்சுமி (48). பாஸ்கா் தனது வீட்டில் தண்ணீா் பிடித்து கொண்டிருந்த போது தீடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு மண்ணச்சநல்லூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பாஸ்கரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதனிடையே கணவா் பாஸ்கா் உயிரிழந்த செய்தி கேட்ட அவரது மனைவி முத்துலெட்சுமி அதிா்ச்சியில் மயங்கிவிழுந்தாா்.
அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்குக் கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துலெட்சுமியும் பரிதாபமாக உயிரிழந்தாா். கணவன் மனைவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!