மழை காலங்களில் மழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிடுவது போல தற்போது கோடை காலத்தில் வெயிலின் தாக்குதல் அளவு குறித்தும் வானிலை ஆய்வு மையம் தகவல்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி நேற்று இந்தியாவிலேயே 2வது அதிகபட்ச வெயிலாக தமிழ்நாட்டில் ஈரோட்டில் 109.4 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.
இன்றைய வானிலை அறிக்கைபடி தமிழ்நாட்டில் தி்ருச்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர் உள்பட 15 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.