Skip to content
Home » திருச்சி அருகே எம்ஜிஆர் சிலை உடைப்பு…. அதிமுக மா.செ.ப.குமார் நேரில் பார்வை…

திருச்சி அருகே எம்ஜிஆர் சிலை உடைப்பு…. அதிமுக மா.செ.ப.குமார் நேரில் பார்வை…

  • by Senthil

திருச்சி மாவட்டம்,  லால்குடி அடுத்த புள்ளம்பாடி ஒன்றியத்திற்குட்பட்டது ரெட்டி மாங்குடி கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு அ.தி.மு.க நிர்வாகிகளால் தமிழகத்தின் மாஜி முதல்வர் எம்.ஜி.ஆரின் முழு உருவ சிலை நிறுவப்பட்டது. இந்தநிலையில்,  நள்ளிரவில் சமுக விரோதிகள் எம்.ஜி.ஆர் சிலையின் இடது கையை உடைத்து இடுப்பு பகுதியில் சேதம் ஏற்படுத்தி உள்ளனர். இதனை  பார்த்த அ.தி.மு.க பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில்  திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்   ப.குமார்   கழக நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டார். அங்குள்ள உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுடன் அசம்பாவிதம் குறித்து விசாரித்தார். மேலும் சிலை புதுப்பிப்பது மற்றும் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து

திருச்சியில் எம்.ஜி.ஆர் சிலை சேதம்: அ.தி.மு.க.,வினர் சாலை மறியல்ஆலோசனை மேற்கொண்டார். உடன் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் T.N.சிவக்குமார், மாவட்ட கழக அவைத்தலைவர் M.அருணகிரி, புள்ளம்பாடி ஒன்றிய கழக செயலாளர் C.ஜேக்கப் அருள்ராஜ், மாவட்ட மகளிரணி செயலாளர் G. செல்வமேரி ஜார்ஜ், பொதுக்குழு உறுப்பினர் I. விஜயா, ஒன்றிய கழக அவைத்தலைவர் ஜெயக்குமார், மற்றும் கழக நிர்வாகிகள் F.தாமஸ், செல்வி பாண்டியன், M.கோவிந்தசாமி, கண்ணாகுடி ரவி, Er.A.ரவிச்சந்திரன், புள்ளம்பாடி சுமதி, கூகூர் KTS.முத்துகுமார், T.தினேஷ்ராஜா, கோர்ட் A.M.சரவணன், கோதை ராஜ், மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடனிருந்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!