Skip to content
Home » திருச்சி அருகே கூலித்தொழிலாளி அடித்துக்கொலை…?.. போலீஸ் விசாரணை…

திருச்சி அருகே கூலித்தொழிலாளி அடித்துக்கொலை…?.. போலீஸ் விசாரணை…

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பர்மா காலனி சேர்ந்தவர் விஜேந்திரன்(40). இவர் கூலித்தொழிலாளி.
இவர் ஏற்கனவே திருமணமாகி குழந்தையுடன் உள்ள வள்ளியம்மை என்ற பெண்ணை திருமணம் முடித்து வாழ்ந்து வந்தார். மேலும் இந்த தம்பதியினருக்கு ஒருமகன், ஒருமகள் உள்ளனர். விஜேந்திரன், வள்ளியம்மை மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் குடிப்பழக்கம் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் வழக்கம் போல் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது தொடர்ந்து விஜேந்திரன் மனைவி வள்ளியம்மை நவல்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விஜேந்திரனை விசாரணைக்கு அழைத்தபோது அவர் வர மறுத்ததாகவும், அதனால் போலீசார் வீட்டுக்கு சென்று விஜயேந்திரனை போலீசார் மிரட்டி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மன உளைச்சலுக்கு ஆளான விஜேந்திரன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தகவல் அறிந்த விஜேந்திரன் மனைவி நவல்பட்டு போலீசுக்கு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே விஜேந்திரனின் தாயார் தனது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் தடயங்கள் இல்லை என்றும், போலீசார் மிரட்டி அடித்ததால் அவன் இறந்திருக்கலாம் என சந்தேகித்து, விஜேந்திரனின் உடலை வாங்க மறுத்து துவாக்குடி அரசு மருத்துவமனை முன்பு விஜேந்திரன் தாயார் லெட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் காத்திருப்பு போராட்டத்தில்

ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் உடலை வாங்க மறுத்த விஜேந்திரன் தாயாரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விஜேந்திரனின் தாயார் தனது மகனின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகும், தனது மகனின் இறப்புக்கு காரணம் தெரிந்த பின்னரே உடலை வாங்குவோம் என எனக்கூறி உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் இது குறித்து விஜயேந்திரனின் தாயார் லட்சுமி கூறுகையில், தனது மகனின் இறப்பில் மர்மம் உள்ளதாகவும், இறப்பிற்கு காரணமான விஜேந்திரன் மனைவி வள்ளியம்மை, மற்றும் அவரது திருநங்கை மகன் மற்றும் அடித்து தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!