Skip to content
Home » குடிபோதையில் காவல்துறை வாகனத்தை இயக்கிய காவலர்….திருச்சி அருகே 2 பேர் பலி…

குடிபோதையில் காவல்துறை வாகனத்தை இயக்கிய காவலர்….திருச்சி அருகே 2 பேர் பலி…

  • by Senthil

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே சீலைப் பிள்ளையார் புத்தூரில் இரு சமுதாயத்தினருக்கு இடையே நேற்று பிரச்சனை ஏற்பட்ட இருந்தது – குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் மீது மற்றொரு தரப்பினர் நோட்டீஸ் ஒட்டியதால் இது போன்ற பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதியினர் நேற்று போராட்டம் நடத்தினர் – இதை அடுத்து அப்பகுதியில் அசம்பாவிதம் சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு காவல் துறையினரை ஏற்றி செல்லும் வேனை ( ஏ.ஆர் போலீஸ் வேன்) சீலை

பிள்ளையார் புத்தூர் பேருந்து நிலையம் அருகே இயக்கி சென்ற காவல்துறையை சேர்ந்த நபர் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் வந்த பெண் உட்பட 3 பேர் மீது மோதினார் – காவல்துறை வாகனம் மோசமாக இயக்கப்பட்டு சாலையில் பயணித்தவர்கள் மீது மோதியதை அடுத்து அப்பகுதி மக்கள் கோபமடைந்து காவல்துறை வாகனத்தை அடித்து நொறுக்கினர்.

பின்னர் காவல்துறை வாகனத்தை கீழே தள்ளி அடியில் சிக்கியவர்களை மீட்டனர் – இதில் சம்பவ இடத்திலேயே 45 வயது மதிப்பு தக்க பெண் ஒருவர் உயிரிழந்தார் – மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கரூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் – மேலும் படுகாயம் அடைந்த ஒருவரையும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தாறுமாறாக காவல்துறை வாகனத்தை இயக்கிய காவலர் மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்து உடனடியாக ரிமாண்ட் செய்யப்பட்டார்.

காவல்துறை வேனை இயக்கக்கூடிய ஓட்டுநர் அல்லாமல் வேறொரு காவலர் வேலை இயக்கியது இத்தகைய விபத்திற்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சீலை பிள்ளையார் புத்தூர் பகுதியில் திருச்சி டிஐஜி மனோகரன் – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார்,முசிறி டிஎஸ்பி யாஸ்மின் – காவல்துறை ஆய்வாளர் முத்தையா மற்றும் கோட்டாட்சியர் ராஜன் மற்றும் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்
பட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!