Skip to content
Home » திருச்சி அருகே பிறந்த சில நாட்களே ஆன சிசு கிணற்றில் வீச்சு….

திருச்சி அருகே பிறந்த சில நாட்களே ஆன சிசு கிணற்றில் வீச்சு….

  • by Senthil

திருச்சி மாவட்டம் , துறையூர் பாலக்காட்டு மாரியம்மன் கோவில் பகுதியில் வசிப்பவர் ராணி இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் அருகே உள்ள கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார் அப்பொழுது அளவுக்கு அதிகமான மீன்கள் ஏதோ ஒரு பொருளை மொய்த்து கொண்டிருப்பதை கண்டு கூர்ந்து கவனித்த போது பிறந்த சில தினங்களில் ஆன பெண் சிசு ஒன்று அழுகிய நிலையில் இருப்பதை

கண்டு துறையூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி இறந்த நிலையில் கிடந்த பெண் சிசுவை மீட்டு துறையூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர் துறையூர் காவல்துறையினர் உடலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் இச் சம்பவம் குறித்து இந்தக் குழந்தை யாருடையது குழந்தையை வீசி சென்றது யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!