Skip to content
Home » திருச்சி அருகே விபத்து…. கல்லூரி மாணவர் பலி…

திருச்சி அருகே விபத்து…. கல்லூரி மாணவர் பலி…

  • by Senthil

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் அருகே அம்பேத்கார் நகர் வளைவு பகுதி உள்ளது. இங்கு
மதுரையில் இருந்து திருச்சி செல்லும் சாலையும், திருச்சியில் இருந்து மதுரை செல்லும் சாலையிலும் திண்டுக்கல் பகுதிக்கு செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் அம்பேத்கர் நகர் அருகே உள்ள கட் ரோட்டில் திரும்பி செல்வது வழக்கம். இதனால் அதிகளவு இந்த பகுதியில் விபத்து ஏற்பட்டு வருகிறது.

திருச்சியை அடுத்த நாகமங்கலம் அருகே உள்ள ஹவுசிங் யூனிட் காலனியை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் சிவா (வயது 22) என்பவர் திருச்சி அருகே கல்லூரியில் படித்து வருகிறார்.

இவர் இன்று காலை கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள சென்டர் மீடியனில் கல்லூரி மாணவன் சிவாவின் மோட்டார் சைக்கிள் வேகமாக மோதி தூக்கி எறியப்பட்டார். சுமார் 50 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு அருகில் உள்ள மற்றொரு சாலையில்
திருச்சியில் இருந்து நாகமங்கலம் பகுதிக்கு காந்தி மார்க்கெட்டில் இருந்து காய்கறி லோடு ஏற்றி வந்து கொண்டிருந்த மினி வேனின் முன்பக்க கண்ணாடியின் மீது மோதி உள்ளே விழுந்தது. இந்த விபத்தில் சிவா தலையில் பலத்த காயம் அடைந்து வேனில் சிக்கிக் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணிகண்டம் போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு துறை உதவியுடன் மினி வேனில் சிக்கி இருந்த மாணவன் சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து சம்பவம் குறித்து மணிகண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்தில் மினி வேன் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் சுக்கு நூறாக நொறுங்கியது.
கூலி வேலை செய்யும் பெற்றோர் தனது மகனுக்கு புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்து ஒன்றரை மாதம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!