Skip to content
Home » திருச்சி அருகே அரசு பஸ்சில் ரகளை செய்த வாலிபர் கைது….

திருச்சி அருகே அரசு பஸ்சில் ரகளை செய்த வாலிபர் கைது….

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காளியை சேர்ந்தவர் முகமது குளாம் இவர் துறையூர் செல்வதற்காக திருச்சியிலிருந்து துறையூர் பஸ்சில் ஏறி வந்துள்ளார் . அப்போது இவருக்கு அருகே அமர்ந்திருந்த துறையூர் நெட்டவேலம்பட்டி பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்ற வாலிபர் மது போதையில் அவரிடம் தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து முகமது குளாம் கேட்டுக் கொண்டதன் பேரில் புலிவலம் போலீஸ் ஸ்டேசன் அருகே  டிரைவர் பஸ்சை நிறுத்தினார். இச்சம்பவம் குறித்து முகமது குலாம் புலிவலம் போலீஸ் ஸ்டேசனில் அளித்த புகாரின் பேரில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட அருண்குமார் என்ற வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!