Skip to content
Home » திருச்சி அருகே நீர் தேக்க தொட்டி மீது ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி…

திருச்சி அருகே நீர் தேக்க தொட்டி மீது ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி…

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கரட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டில் வசிப்பவர் அழகன் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு இப்ப பகுதியில் புதிதாக வீடு கட்டி தன் மனைவியுடன் குடியேறியுள்ளார். வீட்டின் அருகிலேயே ஊராட்சி ஒன்றியத்திற்க்கு சொந்தமான குடிநீர் தொட்டி ஒன்று இருக்கும் நிலையில் இவருக்கு கடந்த 8 வருடங்களாக குடிநீர் இணைப்பு வழங்காமல் ஊராட்சி நிர்வாகம் இழுத்தடித்து வந்துள்ளது. இதனால் இவர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இருப்பினும் புகார் மீது எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என மன வேதனையில் இருந்த இவர் இன்று கிராம சபை தினத்தை

முன்னிட்டு அருகே இருந்த மேல் நிலை குடிநீர் தேக்க தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் இதனை அறிந்த ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற அழகனிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர் அழகன் வீட்டுக்கு உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்குவதாக ஊராட்சி நிர்வாகம் உறுதி அளித்ததை தொடர்ந்து அழகன் சமாதானம் அடைந்து நீர்த்த தொட்டியில் இருந்து கீழே இறங்கினார் கிராம சபை கூட்டத்தை முன்னிட்டு குடிதண்ணிற்காக வாலிபர் தற்கொலைக்கு முயன்றது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!