Skip to content
Home » திருச்சி……. அதிமுக வேட்புமனு பரிசீலனையில் சலசலப்பு

திருச்சி……. அதிமுக வேட்புமனு பரிசீலனையில் சலசலப்பு

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை   தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் பரிசீலனை  இன்று காலை நடந்தது. அதன்படி இன்று காலை திருச்சி மக்களைவ தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி  கலெக்டர்  பிரதீப் குமார்   வேட்புமனு மக்கள் பரிசீலைன தொடங்கினார். இதற்காக வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சைகள், மற்றும் அரசியல் கட்சி வேட்பாளர்களின் ஏஜெண்ட்கள் வந்திருந்தனர்.

அவர்கள் முன்னிலையில் கலெக்டர் வேட்புமனுக்கள் பரிசீலனை  தொடங்கினார். முதலில் அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதிமுக வேட்பாளர் கருப்பையாவின் மனுவை பரிசீலித்தபோது,  சிலர்  கருப்பையாவின் தோட்டத்தில் ஒருவர் இறந்தது தொடர்பாக புகாரில் அவரது பெயர் உள்ளது. எனவே அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என  ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு, சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் கலெக்டர் அதை ஏற்கவில்லை.  முதல் தகவல் அறிக்கையில் பெயர் இருந்தாலும் மனுவை ஏற்றுக்கொள்ளலாம். அதில் எந்த பிரச்னையும்  இல்லை என கலெக்டர் கூறிவிட்டார். தொடர்ந்து பரிசீலனை நடந்து வருகிறது.

திருச்சி் தொகுதியில் மதிமுக வேட்பாளர்  துரை வைகோ, அதிமுக வேட்பாளர் கருப்பையா, நாதக வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ்,  திருச்சி அமமுக வேட்பாளர் செந்தில் நாதன் ஆகியோர் மனுக்கள் ஏற்கப்பட்டது.

சிதம்பரம் தொகுதியில் விசிக வேட்பாளர் தி்ருமாவளவன் உள்பட 18 வேட்பாளர்கள் மனுக்களும் ஏற்கப்பட்டது. கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மனு ஏற்கப்பட்டது. விருதுநகரில்  பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் மனு ஏற்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!