துவரங்குறிச்சி அருகே புதுவயல் பட்டியைச் சேர்ந்த தனியார்ப் பள்ளி பாதுகாவலர் அழகர் (65). இவர் நேற்று முன்தினம் மாலை டூவீலரில் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, அவ்வழியே வந்த கார் மோதியதில் அழகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையறிந்த துவரங்குறிச்சி போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூராய்வு செய்து, நேற்று உறவினரிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
