Skip to content
Home » திருச்சி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ. 24 லட்சம் மோசடி…. தம்பதி மீது வழக்கு…

திருச்சி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ. 24 லட்சம் மோசடி…. தம்பதி மீது வழக்கு…

  • by Senthil

திருச்சி தெற்கு தாராநல்லூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (37). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் தனக்கு நன்கு அறிமுகமான லால்குடி நன்னிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் ,அவரது மனைவி பிரதீபா ஆகியோர் அவரிடம் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினர். ரூ. 25 லட்சம் பணத்தை முதலீடு செய்தால் ஆறு மாதத்தில் வட்டியுடன் சேர்த்து ரூபாய் 50 லட்சம் ஆக திரும்பத் தருவதாக உறுதி அளித்தார் .இதை நம்பிய நந்தகுமார் ரூபாய் 25 லட்சம் பணத்தை கடந்த 2021 ஜூன் 20 ம் தேதி கொடுத்துள்ளார். அதன் பின்னர் வட்டியும், அசலையும் கொடுக்காமல் ஏமாற்றினார்.

அதன் பின்னர் ரூபாய் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 41 தொகையினை கூகுள் பே மூலமாக நான்கு மாதம் கழித்து செலுத்தியுள்ளார். அதன் பின்னர் கடந்த 2023 ல் 2 காசோலைகளை வழங்கி உள்ளார். ஆனால் அதில் பணம் இல்லாமல் திரும்ப வந்துவிட்டது. இது குறித்து நந்தகுமார் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார் .அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!