ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்திலிருந்தே திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகின்றார். திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர் இ.வி.கே. எஸ் இளங்கோவன் வெற்றியினை, மாநகராட்சி
கவுன்சிலர் எல் ரெக்ஸ் தலைமையில், காட்டூர் பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கோட்டத் தலைவர் ஆனந்தராஜ், வார்டு தலைவர் அண்ணாதுரை, மாநகர பொதுச்செயலாளர் ராஜா டேனியல், திரு அழகர், திரு அழக்கு, கோட்டை அன்பழகன் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்